தொடர்விடுமுறையால் வால்பாறையில் குவியும் சுற்றுலா பயணிகள்

பள்ளி தேர்வு விடுமுறை மற்றும் விழாக்கால தொடர்விடுமுறையின் காரணமாக கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.



கோவை மாவட்டம் அடுத்துள்ள வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத்தளம் ஆகும். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதாலும், அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு தொடர் விடுமுறை என்பதாலும் கடந்த சில நாட்களாக வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



இதுகுறித்து வால்பாறை சுற்றுலா பயணிகள் கூறியதாவது:- வால்பாறையில் அமைந்துள்ள சோலையார் அணை, கூலாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, பசுமையான தேயிலைத் தோட்டங்கள், அதிகாலை பனிப் பொழிவு, குளிர்ச்சியான காலநிலை உள்ளிட்டவற்றை காண்பதற்காகவே விடுமுறை நாட்களை இங்கே கொண்டாட வந்துள்ளோம்.



இருப்பினும், வால்பாறையை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...