தொடர்விடுமுறையால் வால்பாறையில் குவியும் சுற்றுலா பயணிகள்

பள்ளி தேர்வு விடுமுறை மற்றும் விழாக்கால தொடர்விடுமுறையின் காரணமாக கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.



கோவை மாவட்டம் அடுத்துள்ள வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத்தளம் ஆகும். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதாலும், அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு தொடர் விடுமுறை என்பதாலும் கடந்த சில நாட்களாக வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



இதுகுறித்து வால்பாறை சுற்றுலா பயணிகள் கூறியதாவது:- வால்பாறையில் அமைந்துள்ள சோலையார் அணை, கூலாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, பசுமையான தேயிலைத் தோட்டங்கள், அதிகாலை பனிப் பொழிவு, குளிர்ச்சியான காலநிலை உள்ளிட்டவற்றை காண்பதற்காகவே விடுமுறை நாட்களை இங்கே கொண்டாட வந்துள்ளோம்.



இருப்பினும், வால்பாறையை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...