கோவையில் அழிந்து வரும் காட்டன் ஆலைகளை நினைவுப்படுத்தும் 5 நட்சத்திர ஹோட்டல்!



தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பருத்தியின் அழகை தற்போது காண முடிவதில்லை. பஞ்சாலைகள், நெசவாலைகளை கோவை மக்கள் ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்த நிலையில், கொங்கு நகரமான கோவை மக்களின் இனிமையான பழைய நினைவுகளை வெளிப்படுத்தும் வகையில் ஐடிசியின் வெல்கம்ஹோட்டல் சார்பில் ஆடைகள் தயாரிக்கப்படும் தரிகள், நூல் கெண்டைகளைப் போன்ற வடிவமைப்புளுடன் கூடிய 5 ஸ்டார் ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபான வகைகளுடன் கூடிய பார் வசதி இடம்பெற்றிருக்கும்.



அதுபோல, ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெல்கம் கஃபேவின் கோவை 5 நட்சத்திர ஹோட்டலிலும் பார் வசதியுண்டு. ஆனால், இது குடிமகன்கள் எதிர்பார்க்கும் மதுபாட்டில்கள் அடங்கிய பார் அல்ல. இங்கு, கொங்கு மண்ணின் பெருமையை உணர்த்தும் வகையிலான காட்டன் (பஞ்சு) பார் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜையிலும் பருத்தி பந்து மாதிரியான வடிவத்தில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.



வெல்கம் கஃபேவின் கோவை 5 நட்சத்திர ஹோட்டலின் உணவு வகைகளும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இனிப்புடன் தொடங்கும் உணவு முறையில், மாங்காய் மீன் குழம்பு, கீமா உருண்டை குழம்பு, பருப்பு ரசம், சேனை கிழங்கு வறுவல், அரைத்து வைக்கப்பட்ட மட்டன் குழம்பு, சின்னவெங்காய மட்டன் சுக்கா போன்ற உணவுகள் அந்த ஹோட்டலின் அடையாளமாக உள்ளது.



இதைத்தொடர்ந்து, இந்த ஹோட்டலில் மொத்தம் 103 அறைகள் உள்ளன. திருமணம், விருந்து, ஆலோசனைக் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவாக குறைந்தபட்சம் 200 பேர் அமரும் வகையிலான அரங்கு கட்டப்பட்டுள்ளது. மேலும், 5-வது மாடியில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குளிப்பதற்காக 3,6 அடி ஆழத்தில் நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது.



கடந்த 1-ம் தேதி முதல் வெல்கம்ஹோட்டல் கோவை 5 நட்சத்திர ஹோட்டல் வாடிக்கையாளரின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த மாத இறுதி வரையில், பார் வசதியை இணைக்க முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...