புதுவை அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளது - புதுச்சேரி மாநில நிதி அமைச்சர் கோவையில் பேட்டி



புதுவை அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் மோதல் இல்லை. ஆனால் கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை என புதுச்சேரி மாநில நிதி அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பல்கலைக் கழக அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாம் பல்கலைக் கழகம் துவக்க விழா கோவையில் இன்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் அப்துல் கலாம் பல்கலைக் கழக வேந்தர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

உள்ளாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள புகழ்பெற்ற கல்வியாளர்கள் இணைந்து டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பல்கலைக் கழகத்தை உருவாக்கியுள்ளனர். 

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் இந்தப் பல்கலைக் கழகத்தின் முதல் கிளை கோவையில் துவங்கப்படுகிறது என்றார்.



இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுச்சேரி வருவாய்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.



அப்போது அவர் கூறுகையில், புதுச்சேரி அரசின் மீது துணை நிலை ஆளுநரின் தலையீடு எங்களுக்கு நெருடளாக உள்ளது. இதற்கு முன் இருந்த ஆளுநர்கள் இது போன்று இல்லை. சில கோப்புகளில் கையெழுத்திடுவதில் ஆளுநர் தாமதப்படுத்துகிறார். 



ஆளுநர் சொல்வது போல புதுவையில் டெங்கு தீவிரமாக பரவவில்லை. டெங்கு பரவுவது கட்டுக்குள் உள்ளது. டெங்குவைக் கட்டுப்படுத்த புதிய கமிட்டி ஒன்றை முதலமைச்சர் நாராயணசாமி அமைத்துள்ளார்.

இவ்வாறு புதுச்சேரி மாநில நிதி அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...