புதுவை அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளது - புதுச்சேரி மாநில நிதி அமைச்சர் கோவையில் பேட்டி



புதுவை அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் மோதல் இல்லை. ஆனால் கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை என புதுச்சேரி மாநில நிதி அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பல்கலைக் கழக அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாம் பல்கலைக் கழகம் துவக்க விழா கோவையில் இன்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் அப்துல் கலாம் பல்கலைக் கழக வேந்தர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

உள்ளாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள புகழ்பெற்ற கல்வியாளர்கள் இணைந்து டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பல்கலைக் கழகத்தை உருவாக்கியுள்ளனர். 

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் இந்தப் பல்கலைக் கழகத்தின் முதல் கிளை கோவையில் துவங்கப்படுகிறது என்றார்.



இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுச்சேரி வருவாய்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.



அப்போது அவர் கூறுகையில், புதுச்சேரி அரசின் மீது துணை நிலை ஆளுநரின் தலையீடு எங்களுக்கு நெருடளாக உள்ளது. இதற்கு முன் இருந்த ஆளுநர்கள் இது போன்று இல்லை. சில கோப்புகளில் கையெழுத்திடுவதில் ஆளுநர் தாமதப்படுத்துகிறார். 



ஆளுநர் சொல்வது போல புதுவையில் டெங்கு தீவிரமாக பரவவில்லை. டெங்கு பரவுவது கட்டுக்குள் உள்ளது. டெங்குவைக் கட்டுப்படுத்த புதிய கமிட்டி ஒன்றை முதலமைச்சர் நாராயணசாமி அமைத்துள்ளார்.

இவ்வாறு புதுச்சேரி மாநில நிதி அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...