கோவையில் போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து : மாநகர காவல்துறை அறிவிப்பு

கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:- 

வேகமாக வாகனங்களை இயக்குதல், சிக்னல்களை மதிக்காமலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்களை இயக்குதல்,  சரக்கு வாகனங்களில் அதிக பாரம் மற்றும் ஆட்களை ஏற்றிச்செல்லுதல் போன்றவை வாகன விதிமீறல்களாகும்.  உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு கமிட்டியானது, சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கோவை மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

2017-ம் ஆண்டில் மட்டும் சாலை விதிகளை மீறியதாக 17 ஆயிரத்து 887 வழக்குகள் பதியப்பட்டு அதில் 16 ஆயிரத்து 574 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை ரத்து செய்ய அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...