டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பான வழக்கின் மீது சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த 63 வயது தொழிலதிபர் ஒருவர் டிஜிட்டல் கைது மிரட்டல் மூலம் ரூ.20 லட்சம் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீளமேடு பகுதியைச் சேர்ந்த 63 வயதான நபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட ஒருவர், தான் மும்பை CBI அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர், உங்கள் ஆதார் கார்டை பயன்படுத்தி சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்றும், எனவே வங்கி கணக்கை பரிசோதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை கேட்டதும், தான் யாருக்கும் பணம் அனுப்பவில்லை என்று பதில் அளித்துள்ளார். உடனே அந்த நபர், "நாங்கள் உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம். எங்கள் அனுமதி இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. துப்பாக்கி ஏந்திய போலீசார் உங்களை கண்காணித்து வருகிறார்கள்" என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், "உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் சொல்லும் கணக்குக்கு அனுப்புங்கள். சரிபார்த்த பிறகு திரும்ப அனுப்பி விடுகிறோம். அதுவரை யாரிடமும் சொல்லக் கூடாது" என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.

பயந்துபோன முதியவர், தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.20 லட்சத்தை அந்த வங்கிக் கணக்குக்கு மாற்றினார். அதன் பிறகு மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாக கூறப்படுகிறது. ஆனால், அதன் பிறகு யாரும் அவரை தொடர்பு கொள்ளவில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த முதியவர், CBI அதிகாரி என்று பேசிய நபரின் செல்போன் எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டபோது அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. விசாரித்தபோது தான் டிஜிட்டல் கைது என்ற பெயரில் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

அவர் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "டிஜிட்டல் கைது என்பதே கிடையாது. மர்ம நபர்கள் குறிப்பாக முதியவர்களை குறிவைத்து இது போன்ற மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். டிஜிட்டல் கைது என்று யார் கூறினாலும் நம்ப வேண்டாம். உடனடியாக 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...