கோவையில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சிறப்பு கிராமசபைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் மகாத்மாக காந்தி வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமூக தணிக்கை மேள்கொள்வது குறித்தும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்திலுள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிப்பாளையம், சர்க்கார்சாமகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானைப்பட்டி, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்னமநல்லூர், பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கராயபுரம், ஆர்.பொன்னாபுரம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் 2016- 17ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சமூக தணிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

வரும் அக்டோபர் 11 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...