இந்திய உணவுக் கிடங்கால் அதிகரிக்கும் செல்லுப் பூச்சிகள் - நடவடிக்கை கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய உணவுக் கிடங்கினால் செல்லுப் பூச்சிகள் அதிகளவில் உற்பத்தியாகி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டம், ஆவாரம்பாளையம் பகுதியில் இந்திய உணவுக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. 1982- ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த உணவுக் கிடங்கானாது 82 ஏக்கர் பரப்பளவில், சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் தானியங்களை இருப்பு வைக்கும் அளவிற்கு கொள்ளளவு கொண்டது.

இதனிடையே, இந்த உணவுக் கிடங்கில் சமீபகாலமாக முறையான பராமரிப்பின்றி செல்லுப் பூச்சிகள் அதிகரித்து வருகின்றது. இந்தப் பூச்சிகள் அருகாமையில் உள்ள ஸ்ரீராம்நகர், பீளமேடு, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பரவி வருகிறது.

எனவே, இந்திய உணவுக் கிடங்கு மேலாளரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தவும், உடனடியாக அதனை கட்டுக்குள் கொண்டு வரவும் வலியுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக் தெரிவித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...