நீலகிரியில் டெங்கு பரவாமல் கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயம் விநியோகம்


நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா டெங்கு பரவாமல் பாதுகாக்க ஆணையிட்டிருந்தார். அதன்படி, குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் பாதுகாக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, இன்று குன்னூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் விஜயகுமார் தலைமையில் குன்னூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள், சுற்றுலா சிற்றுந்து வாகன ஓட்டுனர்கள், வியாபரிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சர்வதேச சட்ட உரிமைகள் கழக செயலாளர், சமூக ஆர்வலர் வழக்கறிஞர் முகமது சலீம், குன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன், மக்கள் மன்றம் குன்னூர் தலைவர் ஜெபரத்தினம், அரசு மருத்துவர் ஷீலா, எக்ஸ்னோரா அமைப்பின் மாவட்ட தலைவர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...