மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வரவேற்று ஏர்.ஆர். ரகுமான் பாடல் வெளியீடு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளான 500 மற்றும் 1000 ரூபாய்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு, பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். ”தி ஃப்ளையிங் லோட்டஸ்” (The flying lotus) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த பாடல் 19 நிமிடங்கள் அடங்கியது. 

இது குறித்து செய்தி நிறுவனத்திற்கு ஏ.ஆர். ரகுமான் பேட்டியளிக்கையில், ”தி ஃப்ளையிங் லோட்டஸ்” மக்களிடையே எழுச்சியை உண்டாக்கும். நான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை விளக்கியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த பாடலின் வரிகளை எழுத்தாளர்கள் விஜய், சிதா வாஷி, பாரூல், கேரி ஹவுலகான், விஸ்வா, வந்தனா பிரசாத், நோரீன், கபீர் சஹானி மற்றும் சத்யா, ராவ் ரமலா ஆகியோர் எழுதியுள்ளனர். 

பாடலில் உணர்ச்சிகளை வெளிக் கொண்டும் வரும் விதமாக, பிரதமர் மோடியின் சிறிய உரை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், பணமில்லா வர்த்தகம், தன்தனாதன் திட்டங்கள் பற்றிய வரிகள் இடம் பெற்றுள்ளன. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...