ரூ.50,000 க்கு மேல் நகை வாங்குவதற்கு பான் கார்டு, ஆதார் எண் கட்டாயமில்லை- மத்திய அரசு அறிவிப்பு

நாட்டின் வரிமுறையில் முக்கிய மாற்றமாகக் கருதப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ள, உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்களிடமிருந்து மத்திய அரசுக்குக் கோரிக்கைகள் வந்தன. இதில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் நிதியமைச்சர்கள் பங்கேற்று, கோரிக்கைளைத் தெரிவித்தனர். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் பல மணி நேரம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவதற்கு பான் கார்டு, ஆதார் எண் அவசியம் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. இனி நகை வாங்க பான் கார்டோ அல்லது ஆதார் எண்ணோ அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு நிதியாண்டில் 2 கோடி ரூபாய்க்கு மேல் நகை, விலையுயர்ந்த பொருட்கள் விற்கும் வர்த்தகர்கள், பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் பொருட்களுக்கும், ஏ.சி. உணவகங்களில் சாப்பிடுவதற்கும் ஏற்கெனவே விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுகிறது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...