கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் ப்ரோசோன் மாலில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கே.எம்.சி.எச் மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் அக்டோபர் 3ம் தேதியன்று துவங்க நடைபெற்று வருகிறது. வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் இலவச ஆலோசனை, டிஜிட்டல் மேமோகிராம், ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட மார்பக பரிசோதனை சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து கே.எம்.சி.எச்.மருத்துவமனை மார்பக புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரூபா கூறியதாவது:-

மார்பக புற்றுநோய் நகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் 2 பெண்களுக்கு ஒருவருக்கு முற்றிய நிலையில்தான் மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை காப்பாற்ற முடியும். பொதுவாக எல்லா புற்றுநோய்களையும் எந்த அறிகுறியும் இல்லாமல், துவக்க நிலையில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அறிகுறி இல்லாமலிருந்தாலும் கூட மார்பக புற்றுநோயை பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம்.

பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும், மார்பு, மார்பகங்களில் வலி, மார்பகத்தில் கட்டி, மார்பகக்காம்புகளில் கசிவு, மார்பகக்காம்பு பின் நோக்கி செல்லுதல், அக்குள்களில் வீக்கம் ஆகிய அறிகுறிகளில் எதாவதொன்று இருந்தாலோ, இரத்தம் சம்பந்தமான நெருங்கிய சொந்தத்தில் யாருக்காவது மார்பக புற்றுநோய் இருத்தாலோ உடனடியாக மார்பக புற்றுநோய் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய அறிகுறிகள் இல்லாவிட்டாலும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமுள்ள பெண்களும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் தங்களது சுய பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாத ஆரம்ப நிலை கட்டிகளை கூட மேமோகிராம் பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம். இது ஒரு எக்ஸ்ரே முறையை போன்ற பரிசோதனையாகும். இதன் மூலம் மார்பகத்தில் கட்டி உருவாவதற்கு முன்பான சிறிய மாற்றங்களை கூட முன்கூட்டியே கண்டுபிடித்து விடலாம். கண்டுபிடிக்கப்படும் 90 சதவீத கட்டிகள் புற்றுநோய் இல்லாத கட்டிகளாகவே இருக்கும். 10 சதவீத கட்டிகள் மட்டுமே புற்றுநோயாக இருக்கும். இவற்றை முன்கூட்டியே கண்டுபிடிக்கும்போது முழுமையாக குணப்படுத்திவிடலாம்.

இங்கு உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் அக்டோபர் 3 முதல் 31ம் தேதி வரையிலான இம்மாதம் முழுவதும் நடக்கிறது. இதில் ரூ.2,750 கட்டணமுள்ள டிஜிட்டல் மேமோகிராம் ரூ.999 சலுகை கட்டணத்திலும், ரூ.900 கட்டணமுள்ள ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரூ.450 சலுகை கட்டணத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மார்பக புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை நிபுணரின் ஆலோசனையும் வழங்கப்படுகிறது. இத்தகைய பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறியலாம். பாதிப்பு நிலை துவக்கத்திலேயே கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைகள் மேற்கொண்டு மார்பக புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தலாம் என்று மருத்துவர் ரூபா கூறினார்.

இதனை தொடர்ந்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா  ஜி பழனிச்சாமி கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சலுகை கட்டணத்தில் பெண்களுக்கான மார்பக பரிசோதனைகளையும் , இலவச ஆலோசனைகளையும் இம்மாதம் முழுவதும் வழங்கிவருகிறோம் என்று கூறினார்.

மேலும் விபரங்களுக்கும், பரிசோதனைக்கான முன்பதிவிற்கும், மார்பக புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரூபா, கே.எம்.சி.எச் மருத்துவமனை, அவினாசி ரோடு, கோவை, தொலைபேசி எண் : +91 98940 08800, +91 422 4324151, , இ-மெயில் : [email protected] ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...