இருகூர் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு

இருகூர் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத சுரங்கப் பாலத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சமூக விரோதிகளால் சேதமடைந்து வரும் நூலகத்தினை மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இருகூர் நகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

இருகூர் நகரில் பொதுமக்கள் பயன்பெற சுரக்கப்பாலம் அமைக்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது. இருப்பினும் 4 மாதங்களைக் கடந்தும் தார்சாலை செப்பனிடப்படாததால் சுரங்கப்பாலம் சிதலமடைந்து வருகிறது. இதனால் மக்களின் வரிப்பணமே விரயமாகிறது. 

இருகூரில் செயல்பட்டு வரும் நூலகத்தின் மூலம் 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். தற்போது நூலகம் அரசு ஆரம்பப் பள்ளி பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மாலை, இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் நூலகம் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும், இருகூர் பேரூராட்சியில் 2வது அத்திக்கடவு குடிநீர் திட்டம் நிறைவடைந்து தட்டுப்பாடு இல்லை. ஆனால், கடந்த மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை புதிய குடியிருப்புகளுக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்பு வழங்க பேரூராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.

எனவே கோவை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...