இந்துத்துவாவிற்கு எதிராக உள்ளதால்தான் கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு முடக்குகிறது- சிபிஎம் மாநில செயலாளர் பேட்டி

பழங்கால தமிழகத்தில் சாதி, மதம் இல்லை என்பதை கீழடி ஆராய்ச்சி வெளிப்படுத்துவதாகவும், இந்துத்துவாவிற்கு எதிராக இது இருப்பதாலேயே அகழ்வாராய்ச்சியை கைவிட மத்திய அரசு முயல்வதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை காந்திபுரம் சிபிஎம் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

கீழடி மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் முடிந்த நிலையில், அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவு பெற்றது என மத்திய அரசு அறிவித்துள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சியை கைவிடும் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல. கீழடி அகழ்வாராய்ச்சி இந்துத்துவாவின் வரலாற்று பார்வைக்கு நேர்மாறாக இருக்கின்றது.

பழங்காலத்தில் சாதிகள் இல்லை என்பது கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்துத்துவாவின் பார்வைக்கு மாறான தகவல்கள் வெளியாவதன் காரணமாகவே பாஜக கீழடி அகழ்வாராய்ச்சியை கைவிடுகின்றது. அகழ்வாராய்ச்சியை மூடுவது என்ற மோசமான முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

கோவை மாநகராட்சியின் பொதுமக்களை பாதிக்கும் வகையிலான வரி வசூலை கைவிட வேண்டும். கோவையில் லாபகரமாக இயங்கும் மத்திய அரசின் அச்சகம் தொடர்ந்து இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தில்லியில் சிபிஎம் கட்சி அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துவது என்பது சரியல்ல. 40 மாத கால ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தியை திசை திருப்பவே பாஜக முயல்கின்றது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 85 பேர் வரை உயிரிழந்து இருப்பதோடு, ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் முறையாக இல்லாதது டெங்கு பரவும் காரணங்களின் ஒன்று. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், விளைநிலங்கள் வழியாக கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். கேரளாவை போல தமிழகத்திலும் கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...