வோடாபோன் பீரிமியர் லீக் பேட்மிண்டன் போட்டியில் விக்டர் அக்ஸல்சென், டாய் சு யிங் ஆகியோரை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி


வருட இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள வோடாபோன் பீரிமியர் லீக் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் பிரிவில் உலக தர வரிசையில் முதல் நிலை வீரர் விக்டர் அக்ஸல்சென் மற்றும் பெண்கள் பிரிவில் டாய் சு யிங் ஆகியோரை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்தியாவில் நடைபெற உள்ள வோடாபோன் பீரிமியர் லீக் பேட்மிண்டன் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் 22ம் தேதி துவங்கி ஜனவரி மாதம் (2018) 14-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் உலக தர வரிசையில் முதல் நிலை வீரரான டென்மார்கை சேர்ந்த விகடர் அக்ஸல்சென் மற்றும் பெண்கள் பிரிவில் தாய்வான் நாட்டை டாய் சு யிங் ரியோ ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால் உள்ளிட்ட தலை சிறந்த வீரர்கள் உட்பட 120 பேர் பங்கேற்கின்றனர்.

இந்த லீக் போட்டிகளில் டெல்லி ஏசர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், சென்னை ஸ்மாஷர்ஸ், ஹதராபாத் ஹண்டர்ஸ், நார்த் ஈஸ்டர்ண் வாரியர்ஸ், அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் மற்றும் அவாதே வாரியர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் சார்ப்பில் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இப்போட்டிகள் சர்வதேச தரம் கொண்ட விளையாட்டு அரங்குகள் உள்ள மும்பை, ஹைதராபாத், லக்நவ், சென்னை, ஹவுஹாத்தி உள்ளிட்ட இடங்களில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்திய பிரீமியர் லீக் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு இந்திய ரூபாயில் 6 கோடி ரூபாய் வரை பரிசுகள் வழங்கபடவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 3 கோடி ரூபாயும் 2ம் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு 1.5 கோடியும் 3 மற்றும் 4ம் இடம் பெற்ற வீரர்களுக்கு 75 லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கபடவுள்ளது.

மேலும், ஒவ்வொரு அணியும் தங்கள் அணி சார்பாக விளையாடும் வீரர்களுக்கு இரண்டு கோடியே பன்னிரெண்டு லட்ச ரூபாய் வரை செலவு செய்ய அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும் ஒரு வீரருக்கு அதிகபட்சமாக 75 லட்ச ரூபாய் வரை ஏலம் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

வோடாபோன் சார்பில் நடைபெறும் போட்டிகளில் அதிகப்படியான பரிசு தொகை கொண்ட போட்டி என்ற காரனங்களால் உலக தரம் வாய்ந்த வீரர்கள் இப்போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்திய பேட்மிண்டன் கழக தலைவர் ஹிமந்தா பிஸ்வா கூறும்போது, உலக அலவில் இந்திய பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் பிரபலமடைந்து வருகிறது. உலக தரம் வாய்ந்த வீரர்கள் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 3-வது வோடாபோன் பீரிமியர் லீக் பேட்மிண்டன் போட்டிகள் இந்திய பேட்டிமிண்டன் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்றார். 

ஸ்போர்ஸ் லைவ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் அதுல் பாண்டே தெரிவிக்கையில், இந்தியாவில் நடத்தப்படும் பேட்மிண்டன் லீக் போட்டிகளை சர்வதேச அளவில் கொண்டு செல்வதே தங்களது நோக்கம். இந்த போட்டிகள் அனைத்தும் நேரிடையாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டார் மூலம் ஒளிபரப்பப்படுகிறது என்றார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...