ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாகக் குறைக்க வலியுறுத்தி பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தினர் (காட்மா) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள துணை அஞ்சலகத்தில் இருந்து பிரதமர், மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர். 



அப்போது,  ஜாப் ஆர்டர்களில் ஈடுபடும் குறுந்தொழில் கூடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி வரியினை 5 சதவீதமாக குறைக்க கோரியும், ஆண்டுக்கு இருபது இலட்ச ரூபாய்க்கு குறைவாக வருவாய் ஈட்டும் குறுந்தொழில் கூடங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழு விலக்கு அளிக்க கோரியும் 20 ஆயிரம் மின்னஞ்சல் மற்றும் தபால் அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர். 



மேலும், ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின்னர் குறுந்தொழில் கூடங்களில் 50 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அண்மையில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி சலுகைகளில் குறுந்தொழிலுக்கு எந்த சலுகையும் இல்லை என குறுந்தொழில் முனைவோர்கள் குற்றம்சாட்டினர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...