சமூக நலத்துறை சார்பில் 3-ம் பாலினத்தவருக்கான கோரிக்கை சிறப்பு முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் 3-ம் பாலினத்தவரின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.



இதில், சுமார் 500-க்கும் மேற்பட்ட 3-ம் பாலினத்தவர்கள் கலந்து கொண்டு, இலவச வீட்டுமனை பட்டா, நலவாரிய அட்டை, விடுபட்டவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நலத்துறை அலுவலர் ஷெரின் ஃபிலிப்பிடம் மனுக்களை கொடுத்தனர்.



இது குறித்து சமூக நலத்துறை அலுவலர் ஷெரின் ஃபிலிப் பேசுகையில், காரமடை பகுதியில் 3-ம் பாலினத்தவர்கள் 24 பேருக்கும், சின்னவேடம்பட்டி பகுதியில் 10 பேருக்கும் குடியிருக்க இடம் வழங்கப்பட்டுள்ளன. அதில் அவர்கள் தற்போது குடியிருந்து வருகின்றனர். இதேபோல, போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இடம் வழங்கும் பணி நிலுவையில் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.



3-ம் பாலினத்தவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களது கோரிக்கைகளை விரைவில் அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...