1,75,000 மக்களை ஊரை விட்டே ஓட வைத்த கலிபோர்னியா காட்டுத் தீ... என்னதான் நடக்கிறது அங்கே?

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டா ரோசா நகரத்தில் தொடர் காட்டுத் தீ நகரம் எங்கும் பரவி வருகிறது. 

சாண்டா ரோசாவின் காடுகளில் எரியத் தொடங்கிய இந்தத் தீ தற்போது நகரம் முழுக்க பரவியுள்ளது. இதனால் பத்து பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். 

கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் இந்தப் பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமாகும். தற்போது இது மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. 

கலிபோர்னியாவில் காட்டுத்தீ 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் காட்டுத் தீ ஏற்படுவதற்கு பெயர் போனது. வருடத்தில் அதிக நாட்கள் இந்த மாகாணம் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளது . முக்கியமாக கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டா ரோசா நகரத்தில் இது போன்ற காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு முறை காட்டுத் தீ ஏற்படுவதற்கு முன்பும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால் இந்த முறை அங்கு மிக மோசமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

நகரத்திலும் பரவியது 



கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தொடர்ந்து 14 காட்டுத்தீக்கள் அந்த மாகாணத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீர் என்று ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ தற்போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகின்றது. சாண்டா ரோசாவின் நகரத்திற்குள்ளும் தற்போது இந்தக் காட்டுத் தீ பரவி உள்ளது. இதனால் இரண்டே நாட்களில் நகரத்தில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதிகள் அழிந்து போய் உள்ளது.

வெடிக்கக் காத்திருக்கும் மருத்துவமனை 

12 மணி நேரத்தில் 20,000 ஏக்கர் நிலத்தை மொத்தமாக அழித்துள்ள இந்தக் காட்டுத் தீ, நகரத்தில் இருக்கும் பல மருத்துவ மனைகளை சூறையாடி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் அது தற்போது மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் சாண்டா ரோசா அரசு மருத்துவமனையையும் நெருங்கி வந்துள்ளது. அந்த மருத்துவமனையில் மிக அதிக அளவில் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த மருத்துவமனையில் தீ பற்றினால் அது வெடிக்கும் அபாயம் உள்ளது என கருதப்படுகிறது.

தீ விபத்த்தால் தொடர் மரணங்கள்

இந்த தீ விபத்தால் இது வரை 175,000 பேர் கலிபோர்னியாவை விட்டு வெளியேறி இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் 10 பேர் தீயிற்கு இரையாகி பலியாகியுள்ளனர். மேலும் 1000 கணக்கானோர் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...