“18 வயது நிறைவடையாத மனைவியுடன் உறவு கொள்வதும் பாலியல் பலாத்காரமே” -உச்சநீதிமன்றம்

18வயதுக்கு கீழ் உள்ள சிறுமிக்கு திருமணம் ஆகியிருந்தாலும் அவரின் விருப்பமின்றி கணவர் உடலுறவுக்கு கட்டாயப்படுத்தினால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக, தனியார் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகுர் மற்றும் தீபக் குப்தா அமர்வு அளித்த தீர்ப்பில், கணவர் கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு அழைப்பதாக அந்த சிறுமி புகார் அளித்தால் கணவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் எனவும், அந்த சிறுமியின் ரத்த சொந்தங்கள் புகார் அளித்தாலும் வழக்குப்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்த அரசியல் சாசன பிரிவு 375ல் கணவருக்கு வழங்கியிருந்த விதிவிலக்கை நீக்கி தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம். 

இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாக, 18வயதுக்கு கீழ் உள்ள சிறுமிக்கு திருமணமாகி அவரின் விருப்பத்துடன் கணவர் உடலுறவு வைத்துக் கொண்டாலும் அது பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் இது போன்று 2கோடியே 30லட்சம் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...