நாட்டின் வரா கடன் அளவு ரூ.9.53 லட்சம் கோடி

மும்பை : நடப்பு ஆண்டின் ஜூன் மாத இறுதி நிலவரப்படி, நாட்டில் உள்ள வங்கிகளின் வராக் கடன் அளவு ரூ.9.53 லட்சம் கோடி என தகவல் வெளியாகி உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டின் ஜூன் இறுதி வரையிலான 6 மாதங்களில் வங்கியில் உள்ள வராக் கடன்களின் அளவு 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய 6 மாதங்களில் வராக்கடன் அளவு 5.8 சதவீதம் அதிகரித்திருந்தது. இந்தியாவில் கம்பெனிகளுக்கான நிதி, வங்கிகள் மூலமே வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல நிறுவனங்கள், குறிப்பாக சிறு நிறுவனங்கள் முறையாக கடனை திருப்பிச் செலுத்தாததால், பொருளாதாரத்தில் மிகப் பெரிய தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுடன், வங்கிகளும் வராக்கடன்களை வசூலிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடன்களை திரும்பப் பெறுவதற்காக வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டுள்ளன. 

இருந்தும் மாநில வங்கிகளில் அதிக அளவிலான தொகை வராக்கடனாக முடக்கப்பட்டுள்ளதால், புதிய கடன்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வங்கிகள் பணப்பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. வராக்கடனுக்காக 20 க்கும் மேற்பட்ட கம்பெனிகளின் சொத்துக்கள் கோர்ட் அனுமதியுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 11 மாநிலங்களில் மட்டும் ரூ.98,000 கோடி வராக் கடனாக உள்ளது. இது போன்று நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் ரூ.9.53 லட்சம் கோடி வரை வராக்கடனாக உள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...