நாட்டின் வரா கடன் அளவு ரூ.9.53 லட்சம் கோடி

மும்பை : நடப்பு ஆண்டின் ஜூன் மாத இறுதி நிலவரப்படி, நாட்டில் உள்ள வங்கிகளின் வராக் கடன் அளவு ரூ.9.53 லட்சம் கோடி என தகவல் வெளியாகி உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டின் ஜூன் இறுதி வரையிலான 6 மாதங்களில் வங்கியில் உள்ள வராக் கடன்களின் அளவு 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய 6 மாதங்களில் வராக்கடன் அளவு 5.8 சதவீதம் அதிகரித்திருந்தது. இந்தியாவில் கம்பெனிகளுக்கான நிதி, வங்கிகள் மூலமே வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல நிறுவனங்கள், குறிப்பாக சிறு நிறுவனங்கள் முறையாக கடனை திருப்பிச் செலுத்தாததால், பொருளாதாரத்தில் மிகப் பெரிய தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுடன், வங்கிகளும் வராக்கடன்களை வசூலிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடன்களை திரும்பப் பெறுவதற்காக வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டுள்ளன. 

இருந்தும் மாநில வங்கிகளில் அதிக அளவிலான தொகை வராக்கடனாக முடக்கப்பட்டுள்ளதால், புதிய கடன்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வங்கிகள் பணப்பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. வராக்கடனுக்காக 20 க்கும் மேற்பட்ட கம்பெனிகளின் சொத்துக்கள் கோர்ட் அனுமதியுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 11 மாநிலங்களில் மட்டும் ரூ.98,000 கோடி வராக் கடனாக உள்ளது. இது போன்று நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் ரூ.9.53 லட்சம் கோடி வரை வராக்கடனாக உள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...