தற்கொலை செய்பவர்களில் பெண்களை விட ஆண்கள் அதிகம்

ஐதராபாத் : இந்த ஆண்டு , ஐதராபாத் நகரில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டதாக குற்றவியல் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

ஐதராபாத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 402 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 265 பேர் ஆண்கள். 265 பேரில் 204 பேர் தூக்கு போட்டும், 39 பேர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். 

ஐதராபாத்தில் இந்த ஆண்டு 137 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் 15 பேர் தீக்குளித்தும், 16 பேர் விஷம் குடித்தும் இறந்துள்ளனர். பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெரும்பாலும் குடும்ப பிரச்னையே காரணமாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம் என சரியாக கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் ஆண்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதற்கு வேலை பளுவால் ஏற்படும் மனஅழுத்தம் அல்லது கடன் பிரச்னையே காரணமாக உள்ளது என்றார். 

மனநல மருத்துவர்கள் கூறுகையில், பெண்களை விட ஆண்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள். சில சமயங்களில் இது தற்கொலை வரை கொண்டு சென்று விடுகிறது. பொதுவாக பெண்களே அதிக அளவில் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால் இதில் ஆண்கள் தங்களின் உணர்வுகளை வெளிக்காட்டுவதில்லை. இதுவே தற்கொலைக்கு காரணமாகி விடுகிறது. இது போன்ற மனஅழுத்தம் கொண்ட ஆண்களை கண்டறிவது மிகவும் கடினம் என்கின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...