மனைவியை கணவன் அடிக்கலாம் : பீஹார் பெண்கள் அதிர்ச்சி பதில்

'மனைவி வாக்குவாதம் செய்தால், அவரை அடிக்கும் அதிகாரம் கணவனுக்கு உள்ளது' என, பீஹாரில், 37 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறையின் உதவியுடன், தொண்டு நிறுவனம், பீஹாரில், பெண்களின் மனநிலை தொடர்பாக, விரிவான கருத்துக் கணிப்பை, சமீபத்தில் நடத்தியது. இதில், பீஹார் பெண்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

'கணவனிடம், மனைவி வீண் விவாதத்தில் ஈடுபடக்கூடாது; அவ்வாறு ஈடுபடும் மனைவியை அடிக்கும் அதிகாரம் கணவனுக்கு உண்டு' என, அம்மாநிலத்தைச் சேர்ந்த, 37 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 'பண்பாடு, விதிமுறைகளை மதித்து நடக்காத மனைவியை அடிக்கும் அதிகாரம், கணவனுக்கு உண்டு' என, 41 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுபோலவே, 'உடலுறவுக்கு மறுக்கும் மனைவியை, கணவன் அடிக்கலாம்' என, பெரும்பாலான பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், வீடு அல்லது குழந்தைகளை கவனிக்காமல் விட்டால், மனைவியை, கணவன் அடிக்கலாம் என, 35 சதவீத பெண்களும், உரிய முறையில் சமையல் செய்யா விட்டால், மனைவியை, கணவன் அடிக்கலாம் என, 30 சதவீத பெண்களும், கூறியுள்ளனர்.

அதேசமயம், 'மனைவியை, கணவன் அடிக்க தகுந்த காரணம் இருக்க வேண்டும்' என, வேலைக்கு செல்லும் பெண்களில், 56 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். 'உடலுறவு கொள்ளும் மனநிலையில் இல்லை என்றால், மனைவி மறுப்பு தெரிவிப்பது தவறில்லை' என, 80 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...