'ஆன் - லைனில்' பட்டாசு : டில்லிவாசிகள் ஆர்வம்

டில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில், அக்., 31 வரை, பட்டாசு விற்பதற்கு தடை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால், 'ஆன் - லைன்' மூலம், பட்டாசு வாங்கும் முயற்சியில், டில்லி மக்கள் இறங்கி உள்ளனர். 

டில்லியில், காற்றின் மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, டில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில், பட்டாசு விற்பனைக்கு, உச்ச நீதிமன்றம், 2016ல், தடை விதித்திருந்தது. சமீபத்தில், இந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம், அக்., 31 வரை, டில்லியில், பட்டாசுகள் விற்பதற்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டது.

டில்லியில், 19ல், தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவில், பட்டாசு வெடிப்பது குறித்து, ஏதும் கூறப்படவில்லை. அதனால், அண்டை மாநிலங்களில் இருந்தும், ஆன் - லைன் மூலமாகவும், பட்டாசு வாங்குவது அதிகரித்துள்ளது.

இது குறித்து, வழக்கறிஞர்கள் கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பில், பட்டாசு விற்பனை குறித்து மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஆன் - லைன் மூலமாக வாங்குவதிலும் சிக்கல் உள்ளது. விற்பனை செய்யும் நிறுவனம், பெங்களூரில் செயல்பட்டாலும், விற்பனை செய்யக்கூடிய இடம் டில்லி என்பதால், அதற்கு தடை உள்ளது. அதே போல், டில்லியில் இருந்து செயல்படும், ஆன் - லைன் நிறுவனம், எந்த ஊருக்கும் பட்டாசுகளை விற்பனை செய்ய முடியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...