ஆனைகட்டி அருகே யானைகள் பயன்படுத்தும் வழித்தடங்கள் வேலியிட்டு அடைப்பு

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி வழியே உள்ள ஆலமரமேடு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சலிம் அலி பறவையியல் துறை மற்றும் இயற்கை வரலாறு மையப்பகுதி வழியாக வனப்பகுதிக்குள் இருக்கும் யானைகள் சாலைகளுக்கு வருகின்றன. இந்த நடைபாதையை பயன்படுத்தி ஆனைக்கட்டி, போளுவாம்பட்டியை இணைக்கும் சாலையை கடந்து சென்று அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நீர்தொட்டிகளில் நீர் குடிக்கச் செல்கின்றன. 

வறட்சி காலங்களில் எஸ்.ஏ.சி.ஓ.என். வளாகத்தை கடந்து அங்கு செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் அருகே அமைக்கப்பட்டுள்ள நீர்தேக்கங்களில் யானைகள் நீர் குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.  மேலும், அந்த வழியாக யானைகள் நடமாட்டம் இருப்பதை அப்பகுதி மக்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கின்றனர். 

அண்மையில் நீர் குடிப்பதற்காக சாலைக்கு வந்த யானைகள், அந்த வழியாக சென்ற வாகனங்களை துரத்தும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால், யானைகள் சாலைகளுக்கு வராதவாறு வேலிகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து சாலைகளுக்கு வர யானைகள் பயன்படுத்தும் வழித்தடங்களை தனியார் நிறுவனம் சார்பில் இரும்பு வேலியிட்டு அடைக்கப்பட்டுள்ளது. 



ஆனால், இந்தவேலியை யானைகள் எளிதில் உடைத்துவிடும் என்றும், இதுமாதிரியான தடுப்புகளை அமைப்பதினால், மற்ற பகுதிகளில் யானைகள் மோதல் போக்கில் ஈடுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கோவை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வேலி அமைக்கப்பட்டுள்ள இடம் தனியாருக்கு சொந்தமானது எனவும், யானைகள் செல்வதற்கான சரியான பாதையை அமைத்து வேலியை கட்டுமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...