தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் கோரி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் தொழிலாளர்கள் அதிர்ப்தியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள சோலையாறு எஸ்டேட் தொழிலாளர்கள் 20 சதவிகித தீபாவளி போனஸ் வேண்டியும், நிர்வாகம் வழங்கிய 9.5 சதவிகித போனஸிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 6 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதேசமயம், வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு நாளை தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப முடிவு செய்யப்பட்டது. 

மேலும், இருபது சதவிகித போனஸ் வழங்க வேண்டுமெனவும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் குடும்பத்துடன் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...