டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் அஜாக்கிரதையாக செயல்படும் அரசு அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- மாவட்ட ஆட்சியர்

மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைளில் அஜாக்கிரதையாக செயல்படும் அரசு அலுவலர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி மற்றும் அன்னூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் இன்று (அக்டோபர் 13) மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புறவு சுகாதாரப்பணிகளை, ஒவ்வொரு வீடு வீடாகவும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார். 

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடத்தில் வலியுறுத்தியதாவது,:-

''கோவை மாவட்டம் முழுவதிலும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலர்களாலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக கல்லூரி மாணவ மாணவியர்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என பலரும் தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஒவ்வொறு மாதமும், முதல் 5 தினங்களுக்கு நிலவேம்பு நீர் பள்ளிகளிலேயே வழங்கப்பட்டு வருகின்றது. குடியிறுப்பு பகுதிகளில் தூய்மை காவலர்கள் மூலமும், சுகாதாரப்பணியாளர்கள் மூலமும் பல்வேறு துப்புறவு, சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சுகாதாரத்துறையின் மூலம் சுழற்சி அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் நடமாடும் மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அரசு ஆரம்ப நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுடன் வருபவர்களை தொடர்ந்து கண்கானித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்களும் சுகாதாரம் காத்து நமது மாவட்டத்தை டெங்கு இல்லாத மாவட்டமாக மாற்றிட உறுதுணையாக இருந்திட வேண்டும்''.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வலியுறுத்தினார்.

மேலும், மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் அஜாக்கிரதையாக இருக்கும் அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி, உதவி இயக்குநர்கள் (ஊராட்சி) பத்மாவதி, (பேரூராட்சிகள்) கணேஷ்ராம், கோட்டாட்சியர் ஆர்.சின்னசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...