பழைய கடன்களை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு


பழைய கடன்களை ரத்து செய்துவிட்டு புதிய கடன்கள் வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பெரும் இழப்பிற்கு உள்ளாகினர். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருந்தாலும் முறையான கணக்கெடுப்பு நடத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். 



மேலும், ஒரு சில பகுதிகளில் மட்டும், குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு இழமேலும், ஒரு சில பகுதிகளில் மட்டும், குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிவிட்டு பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர்.

எனவே, வறட்சி நிவாரணம் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கடன் பெற்று வறட்சியால் செலுத்த முடியாத விவசாயிகளின் கடனை ரத்து செய்துவிட்டு, இந்த ஆண்டு சாகுபடிக்கான புதிய கடன்கள் வழங்க வேண்டும்.

பயிற்காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து இருப்பதை மாற்றி தேசிய காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...