ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் பருப்பை உண்டதால் உடல்நலம் பாதிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு

ரேசன் கடைகளில் விநியோகிக்கும் மஸ்தூர் எனப்படும் சிவப்பு நிற பருப்பை உண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ஜகநாதன் என்பவர் பொதுவிநியோக திட்டத்தின் மூலம், அப்பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் மஸ்தூர் பருப்பை வாங்கி பயன்படுத்தி உள்ளார். இதனால் வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகள் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 



முன்னதாக, இது தொடர்பாக ஜகநாதன் பேசுகையில்,  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மஸ்தூர் பருப்பை பயன்படுத்த வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு, தற்போது ரேஷன் கடைகளில் அதனை விநியோகம் செய்து வருகிறது. இதனை உட்கொள்ளும் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கிறது. மஸ்தூர் பருப்பு விநியோகிக்க கூடாது. இதனை வலியுறுத்தி சுகாதாரம் மற்றும் உணவுத்துறை அமைச்சர்களுக்கு இந்த பருப்பை அனுப்ப உள்ளேன்.என்று  கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...