ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் பருப்பை உண்டதால் உடல்நலம் பாதிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு

ரேசன் கடைகளில் விநியோகிக்கும் மஸ்தூர் எனப்படும் சிவப்பு நிற பருப்பை உண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ஜகநாதன் என்பவர் பொதுவிநியோக திட்டத்தின் மூலம், அப்பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் மஸ்தூர் பருப்பை வாங்கி பயன்படுத்தி உள்ளார். இதனால் வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகள் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 



முன்னதாக, இது தொடர்பாக ஜகநாதன் பேசுகையில்,  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மஸ்தூர் பருப்பை பயன்படுத்த வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு, தற்போது ரேஷன் கடைகளில் அதனை விநியோகம் செய்து வருகிறது. இதனை உட்கொள்ளும் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கிறது. மஸ்தூர் பருப்பு விநியோகிக்க கூடாது. இதனை வலியுறுத்தி சுகாதாரம் மற்றும் உணவுத்துறை அமைச்சர்களுக்கு இந்த பருப்பை அனுப்ப உள்ளேன்.என்று  கூறினார். 

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...