கயிறுப்பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜப்பான் ஒப்புதல் - கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்

கயிறுப்பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜப்பான் ஒப்புதல் அளித்திருப்பது கயிறு வாரியத்தின் கடந்த மூன்று ஆண்டு முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச கயிறு கண்காட்சியில் பங்கேற்றுவிட்டு விமானம் மூலம் கோவை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசுகையில், கயிறு தொழிலில் உள்ள பல நுட்பமான விஷயங்கள் மற்றும் இயற்கை உரங்கள் ஆகியவை குறித்து கண்காட்சி மூலம் அறிய முடிந்தது. இதன்மூலம் கயிறு பொருட்கள் ஏற்றுமதி பன்மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கயிறு பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ரூ.1,630 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.2,860 கோடியாக உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் ரூ.20,000 கோடி என்ற அளவுக்கு மாறி மிகப்பெரிய பொருளாதார சந்தையாக இந்தியா மாறும். மேலும், கடுமையான வறட்சி காரணமாக இந்த ஆண்டு கயிறு உற்பத்தி மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருந்தும். சர்வதேச அளவில் 80 சதவீதத்தை தக்க வைத்து இந்தியா முன்னனியில் உள்ளது. 

இதேபோல, நிதி ஒதுக்கீட்டை பொறுத்தவரை கயிறு வாரியம் என்றாலே கடந்த ஆண்டு வரை ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், அதனை இந்த ஆண்டு ரூ.500 கோடியாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.  கயிறு வாரியத்தின் கடந்த மூன்று ஆண்டு முயற்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இந்தியாவுடன் இணைந்து கயிறு பொருட்கள் உற்பத்தியில் கூட்டு முயற்சிக்கு ஜப்பானியர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.  முதல் முறையாக ஜப்பானின் ஆர்டர் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...