இரட்டை இலை சின்னம் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி பெறும் - துணை சபாநாயகர் தம்பிதுரை

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி பெற்று, அச்சின்னத்தை பெறுவது உறுதி என அதிமுக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி பெறும்.

பெரும்பான்மையான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்குமென்பது உறுதி. இன்று நடைபெறும் இந்த வழக்கில் தங்கள் தரப்பு வெற்றி பெறும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் ஆதரவு அரசிற்கு உள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் இந்த இயக்கம் செயல்படும்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தம்பிதுரை செயல்படுகிறார் என்ற முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் குற்றச்சாட்டு குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு, பதிலளிக்க  தம்பிதுரை மறுத்து விட்டார்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...