தொலைதூர கிராமங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சியர்

மாவட்டத்தின் தொலைதூர கிராமங்களில் நடமாடும் மருத்துவமுகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கள்ளப்பாளையம் ஊராட்சி சின்னகுயிலி கிராமத்தில் இன்று (அக்டோபர் 16) ஒவ்வொரு வீடு வீடாக சென்று டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பொதுமக்களிடத்தில் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்ட நிர்வாகம் மழைகாலங்களில் உண்டாகக்கூடிய தொற்றுநோய்கள் மற்றும் காய்ச்சல்களை கவனமுடன் கையாண்டு நிவர்த்தி செய்து வருகின்றது. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய ஏடிஸ் லார்வாக்களை ஒழிக்கும் பணியும் மாவட்டம் முழுவதிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

டெங்கு காய்ச்சல் எளிதில் குழந்தைகளை கட்டுப்படுத்தும் என்பதனால் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் நிலவேம்பு குடிநீர் அனைத்து அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளிகள் ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 தினங்களில் கட்டாயமாக வழங்கப்பட்டு வருகின்றது.



மேலும், பொதுமக்கள் அதிகம் செல்லும் இடங்களிலும், மாநகராட்சி சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், அம்மா உணவகங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், தொலைதூர கிராமங்களிலும் நடமாடும் மருத்துவமுகாம்கள் மூலம் தொடர் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



சுகாதார பணியாளர்கள் மூலம் வாரந்தோறும் அனைத்து வீடுகளிலும் ஏடிஸ் கொசுப்புழு வளரும் சூழல் உள்ள இடங்களாக அறியப்படும், மேல்நிலை மற்றும் கீழ்நிலைத் தொட்டிகள், திறந்த டிரம்கள் ஆகியவற்றில் கொசுப்புழுக்களை கண்டறிந்து அழித்து வருகின்றனர். மேலும் உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள், தேவையற்ற ஆட்டுக்கல் போன்றவற்றையும் கண்டறிந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...