தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க தடைகளில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மனு

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்கக்கோரி பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க ஆண்டுதோறும் பட்டாசுகளை வெடிக்க கோவை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 13-ம் தேதி கோவை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்கக்கோரி பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், இந்துக்களை மிரட்டுகின்ற தொ னியில் எச்சரிக்கைவிட்டதை பாரத் சேனா கண்டிக்கிறது. கிறிஸ்துமஸ் அன்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான புத்தாண்டு அன்றும் நள்ளிரவில் பட்டாசு வெடித்தும் வாண வேடிக்கைகளை வெடித்து கொண்டாடிகின்றனர். அப்போதெல்லாம், எந்த அறிக்கையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடுவதில்லை. பட்டாசுகள் வெடிப்பதற்கு எவ்வித தடைகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதிக்காமல் இருப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...