பஞ்சமி நிலங்களை ஏமாற்றி அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

போலி ஆவணங்களை தயார் செய்து பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, விவசாய நிலங்களை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.



அந்த மனுவில், கோவை மாவட்டம், காரமடை பகுதியில் உள்ள குட்டையூர் பகுதியை சேர்ந்த 33 குடும்பங்களுக்கு சுமார் 62 ஏக்கர் அளவுக்கு விவசாயம் செய்ய தங்களது முன்னோர்களுக்கு, பஞ்சமி நிலங்களை ஆங்கிலேயர்கள் வழங்கினர். அந்த இடத்தில் தற்போது வரை விவசாயம் செய்து வருகிறோம். 

இந்த நிலையில், காரமடையைச் சேர்ந்த பவுன்புரோக்கர் மகேந்திரகுமார் சேட்டு என்பவர் தங்களுடைய நிலத்தை விற்பனை செய்ததாக போலி ஆவணங்கள் தயார் செய்து வைத்துள்ளார். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சமிநிலம் தன்னுடையது எனக் கூறி கிராம மக்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார். 

எங்களுக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்த மகேந்திரகுமார் சேட்டு என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில், குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...