பஞ்சமி நிலங்களை ஏமாற்றி அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

போலி ஆவணங்களை தயார் செய்து பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, விவசாய நிலங்களை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.



அந்த மனுவில், கோவை மாவட்டம், காரமடை பகுதியில் உள்ள குட்டையூர் பகுதியை சேர்ந்த 33 குடும்பங்களுக்கு சுமார் 62 ஏக்கர் அளவுக்கு விவசாயம் செய்ய தங்களது முன்னோர்களுக்கு, பஞ்சமி நிலங்களை ஆங்கிலேயர்கள் வழங்கினர். அந்த இடத்தில் தற்போது வரை விவசாயம் செய்து வருகிறோம். 

இந்த நிலையில், காரமடையைச் சேர்ந்த பவுன்புரோக்கர் மகேந்திரகுமார் சேட்டு என்பவர் தங்களுடைய நிலத்தை விற்பனை செய்ததாக போலி ஆவணங்கள் தயார் செய்து வைத்துள்ளார். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சமிநிலம் தன்னுடையது எனக் கூறி கிராம மக்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார். 

எங்களுக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்த மகேந்திரகுமார் சேட்டு என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில், குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...