பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வாழ்வியல் நெறியூட்டும் நிகழ்ச்சி “நெல்லிக்கனி” திட்டம் துவக்கம்

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வாழ்வியல் நெறியூட்டும் நிகழ்ச்சி “நெல்லிக்கனி” திட்டம் தொடங்கப்பட்டது. 

கோவையில் ரோட்டரி கிளப் கோயமுத்தூரின் சமூக நலப் பணிகளின் ஒரு பகுதியாக, நெல்லிக்கனி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கான விழா கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ மூர்த்தி சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மேஜர். டோனர் திரு.பி.பி. சுப்பிரமணியம் கலந்து கொண்டார். 

விழாவில் ரோட்டரி கிளப் தலைவர் சாண்டியாகோ ஜேசு கூறியதாவது :- நெல்லிக்கனி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் நோக்கமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கம் ஊட்டுவது தான். சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களின் புதல்வர்கள் தான் பெரும்பாலும், அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர், பள்ளிப் படிப்பை முடிப்பதே பெரும் சவாலாக இருக்கிறது. அவர்களுக்கு உத்வேகம் அளித்து, அவர்களை பெரிய சாதனையாளர்களாக மாற்றுவதே இந்த நெல்லிக்கனி புரோஜக்ட் முக்கிய குறிக்கோள். இதன் மூலமாக தேசிய கட்டமைப்பில் நாங்கள் முக்கிய பங்களிப்பை வழங்க உள்ளோம். 

இந்தத் திட்டத்தின்படி, ரூட்ஸ் குரூப்ஸ் ஆப் கம்பெனிகள் இயக்குநர் கவிதாசன் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு அரசுப் பள்ளிகளை பார்வையிட்டு, அங்கே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் உரையாற்றுவார். நெல்லிக்கனி திட்டம் துவங்கியதில் இருந்தே, அந்தத் திட்டம் வெற்றி பெற பல்வேறு உதவிகளையும் கவிதாசன் தொடர்ந்து செய்து வருகிறார். இந்தத் திட்டத்தின் மூலமாக, சுமார் ஒரு லட்சம் மாணவர்கள், 2400 ஆசிரியர்களும் பலன் அடைவர். 

கடந்த 70 ஆண்டுகளாக, மக்கள் சேவையில் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் ஈடுபட்டு வருகிறது. இந்தக் கிளப் பல்வேறு சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ரூ.69 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கிக் கொடுக்கும் பணியிலும் இந்தக் கிளப் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்தக் கிளப் திப்பனூர் மற்றும் பன்னிமடை ஆகிய கிராமங்களை தத்தெடுத்து, அங்கே வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 



விழாவில் மாணவ மாணவியர்களுக்கு வானம் தொடலாம் வாங்க என்ற நூலை வெளியிட்டு மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்களையும் நெல்லிகனிகளை சிந்தனைக் கவிஞர் டாக்டர்.கவிதாசன் வழங்கினார். 



Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...