தீபாவளி பண்டிகையின் போது விபத்து நேர்ந்தால் அதை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை தயாராக உள்ளது - மாவட்ட அலுவலர் பேட்டி

நம் நாட்டில் பண்டிகை என்றாலே கொண்டாட்டங்களுக்கு அளவில்லை. மற்ற பண்டிகைகளைப் போல அல்லாமல் தீபாவளி பண்டிகை தனிச்சிறப்பு வாய்ந்தது. வேற்றுமைகளை மறந்து அனைத்து தரப்பு மக்களும் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்கின்றனர். பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது ஆனந்தமாக இருந்தாலும், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தீ விபத்துக்கள் ஏற்படுவது கவலையளிக்கும் விதமாக உள்ளது.

இந்த சூழலில், தீபாவளியின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள மாவட்ட தீயணைப்பு துறை தயார் நிலையில் உள்ளதாக தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு தீயணைப்பு துறை மேற்கொள்ள இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பாக அவர் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- 

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, கணபதி, பீளமேடு, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் என எட்டு  தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இங்கு தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 165 பேர் பணியாற்றி வருகின்றனர். 16 தீயணைப்பு வாகனங்கள் உள்ளன. 

தீயணைப்பு வாகனம்

 

கோவை மாநகர் பகுதிக்குள் நான்கு தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு உள்ள தீயணைப்பு வாகனங்கள் கோவையின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட உள்ளன.

உக்கடம், ஒப்பணக்கார வீதி, என்.எஸ்.ஆர்.ரோடு, சத்தி சாலை, காந்திபுரம் மேம்பாலம், சிங்காநல்லூர் சிக்னல் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளது.  தீவிபத்து போன்ற அசம்பாவித சம்பங்கள் ஏற்பட்டால் அந்த பகுதிக்கு உடனடியாக தீயணைப்பு வாகனம் செல்லும் விதமாகவே வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. எனவே, விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று pinvilaivukalai (பெருவிபத்தை) தவிர்க்க முடியும். 

பட்டாசுக்கடைகள் 

பட்டாசுக்கடைகளை மேற்பார்வையிட பகுதி வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், பட்டாசுக்கடைகளுக்கு தினமும் சென்று பாதுகாப்பை உறுதி செய்வார்கள். பட்டாசுக்கடை வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படும் நேரத்தில் அவர்களுக்கு தக்கஉதவிகள் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சுமார் 10 தீ விபத்துகள் ஏற்பட்டன. இந்த ஆண்டு அந்த மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீயணைப்புத் துறையினர் சார்பில் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். 

பாதுகாப்பான தீபாவளி 

பட்டாசுகள் எளிதில் தீப்பற்றக்கூடியவை. உராய்வினால் கூட அவைகள் தீப்பிடிக்கலாம். எனவே பட்டாசுகளை சேமித்து வைக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். தளர்வான ஆடைகளை அணியாமல் இருப்பது நல்லது. மருத்துவமனை, போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் குடிசை பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். 

பொறுப்புணர்வோடு தீபாவளியை கொண்டாடினால், அது அனைவருக்கும் பாதுகாப்பான தீபாவளியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.  

Newsletter

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...