எஸ்.ஏ.சி.ஓ.என் மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி நிறுத்தம் - எஸ்.ஏ.சி.ஓ.என் இயக்குநர் மறுப்பு

சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்திற்கு (எஸ்.ஏ.சி.ஓ.என்)  வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி, நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல, வெறும் வதந்தி என அதன் இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார். 

மும்பையைச் சேர்ந்த பிரபல பறவையியல் ஆராய்ச்சியாளர் சலீம் அலி புகழைப் போற்றும் வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையம் கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது.  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த பறவையியல் ஆராய்ச்சி மையத்திற்கு, ஆண்டுதோறும்  நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்திற்கான மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டு விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், இந்த தகவலை, எஸ்.ஏ.சி.ஓ.என் மையத்தின் இயக்குநர் சங்கர் மறுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த ஆராய்ச்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது முதல் தற்போது வரை மத்திய வனம் மற்றும சுற்றுச்சூழல் துறையின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. எங்களது ஆராய்ச்சி மையமானது பல்வேறு திட்டங்களை கொண்டுள்ளது. அவற்றிற்கு மத்திய அரசுதான் நிதி வழங்குகிறது. ஒருசில திட்டங்கள், மத்திய வனம் மற்றும சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் உள்ள முதன்மையான பறவையியல் ஆராய்ச்சி மையங்களில், சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையமும் ஒன்று. மொத்தம் 54.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மையமானது ஆனைகட்டி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. எஸ்.ஏ.சி.ஓ.என் மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் வதந்தி. இதனை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு  அவர் கூறினார். 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...