முறையான ஊதியம் வழங்கக் கோரி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் இரண்டாம் நாளாக வேலை நிறுத்தம்

முறையான ஊதியம் மற்றும் சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் இன்று இரண்டாம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



2016-17 ஆண்டுக்கான முறைப்படியான ஊதியம், சட்டப்படியான போனஸ் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர், ஓட்டுநர், கிளீனர் கோயமுத்தூர் லேபர் யூனியன், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கம் மற்றும் ஜனசக்தி மஸ்தூர் சபா போன்ற அமைப்பினர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து, இன்று இரண்டாம் நாளாக கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதுகுறித்து, ஏஐடியுசி தலைவர் என்.செல்வராஜ் கூறுகையில், 'வியாழனன்று மாநகராட்சி சார்பாக சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் முறையான சம்பளம், போனஸ் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.



மேலும், அனைத்து மண்டலங்களிலும் குழுக்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். குழு அமைப்பது பற்றிய தகவல் அரசு சார்பாக வெளியிட வேண்டும் என்றும் கேட்டோம். ஆனால், அதற்கு மாநகராட்சி சார்பாக முறையான ஒப்புதல் கிடைக்கவில்லை. கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேரும் வரை போராட்டம் தொடரும்' என்றார்.

ஏஐடியுசி நிர்வாகி ஆர்.தேவராஜ் கூறுகையில், 'டெங்கு போன்ற நோய்கள் பரவிவரும் சூழலில் எங்கள் போராட்டத்தால் நகரில் குப்பைகள் அனைத்து இடத்திலும் சுத்தம் செய்யாமல் கிடக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் மேலும் தாமதிக்காமல் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன்பாக அனைத்து குப்பைகளும் கொட்டப்படும்' என்று எச்சரித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...