டெங்குவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- விசிக தொல்.திருமாவளவன்

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் டெங்குவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



"டெங்கு பாதிப்பு தமிழகத்தில் கடுமையாக, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மத்திய ஆய்வுக்குழு பெயரளவிற்கு மட்டுமே சுற்றுப் பயணம் செய்து கண் துடைப்பு நாடகம் நடத்தியுள்ளது. டெங்குவால் எத்தனை பேர் உயிரிழந்தனர், டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு நடவடிக்கைகள், சிகிச்சை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கேரள அரசின் நடவடிக்கை பாராட்டுக்குறியது. இதற்கு முன்னோடியாக தமிழகத்தில் ஏற்கனவே 206 பேருக்கு கடந்த திமுக அரசு சார்பில் ஆகம விதிகளின்படி அர்ச்சகராக நியமிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கான பணி நியமனத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.

மெர்சல் படத்திற்கு எதிராக பாஜக போராடுவதை விடுத்து, அப்படத்திற்கு அனுமதி வழங்கிய சென்சார் போர்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவதே சரியாக இருக்கும்.

கலைஞர் தன்னம்பிக்கை நிறைந்த தலைவர். கோபாலபுரத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை காரில் பயணம் செய்யும் அளவுக்கு அவரது உடல் நிலை முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

Newsletter

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...