மது அருந்த பணம் கேட்டு வாலிபரை தாக்கிய காவல்துறை அதிகாரி கைது

கோவை அருகே மது அருந்த பணம் கேட்டு வாலிபரை தாக்கிய காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை மாவட்டம், கோவில்பாளையத்தை அடுத்த ஏ.எஸ். குளம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (38). பண்ணை தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (24). இவர் கோவைப்புதூரில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை (4-வது பட்டாலியன்)ல் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.

தீபாவளி தினத்தன்று ஏ.எஸ். குளம் பேருந்து நிலையம் அருகே தமிழ்செல்வன், தனது சகோதரர் மோகன் பிரபாகரன் (26) மற்றும் 3 நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு சென்ற நடராஜிடம் மரு அருந்த பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் மற்றும் அவரது சகோதரர் மோகன் பிரபாகரன் ஆகிய இருவரும் நடராஜை தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக, நேற்று (வியாழனன்று) காலை கோவில்பாளையம் காவல் நிலையத்தில் நடராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது சகோதரரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

பொதுமக்களை மது அருந்த பணம் கேட்டு மிரட்டியதோடு, தாக்கிய காவல்துறை அதிகாரியை கைது செய்த சம்பவம் கோவில்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...