மாநகராட்சி சார்பில் சுற்றுச்சூழலை பாதிக்காத பைகள்

கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் மக்கும் தன்மையுடைய பைகளை கோவை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பைகளை அறிமுகம் செய்தார். மேலும், ஸ்வச் பாரத் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து "மை பேக் மை ஷாப்பிங் எக்ஸ்போ" மூலம் சுற்றுச்சூழலை பாதிக்காத பைகள் குறித்து பொதுமக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினார்.



இக்கூட்டத்தில் பங்கேற்ற ஹோட்டல் ஓனர்ஸ் அசோசியேஷன் ஆப் கோயம்புத்தூர் மற்றும் கேடெரெர்ஸ் அசோசியேஷன் ஆப் கோயம்புத்தூர் உள்ளிட்ட அமைப்புகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மக்கும் தன்மையுடைய பைகளை பயன்படுத்துவோம் என உறுதியளித்தனர். 

முன்னதாக, தீபாவளி முதல் அன்னபூர்ணா குழுமம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆகியவை பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதிக்காத மக்கும் பைகளை பயன்படுத்த துவங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தக் கூட்டத்தில் இந்தியா பிளாஸ்டிக் இன்ஸ்டிடியூட் கோயம்புத்தூர் சேப்டர் மற்றும் ரூட்ஸ் நிறுவனம் சார்பாக சுற்றுச்சூழலை பாதிக்காத மக்கும் பைகளை தயாரிக்கும் முறை குறித்து பிளாஸ்ட்டிக் பை தயாரிப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.



மேலும், 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து கள ஆய்வின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...