சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பாரத் சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.



இது தொடர்பாக பாரத் சேனா அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் லோட்டஸ் மணிகண்டன், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில், கூறியிருப்பதாவது, சிங்காநல்லூர் பேருந்து பின்புறம் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை (1655) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு வரும் குடிமகன்கள்  சாலையின் இருபுறமும் தங்களது வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர்.  இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

அதுமட்டுமில்லாமல்,  அந்த டாஸ்மாக்க கடையில்  மது அருந்திவிட்டு சாலையின் ஓரம் நின்று கொண்டு தகாத முறையில் பேசுவதாலும், தகாத செயல்களை செய்வதாலும் அவ்வழியாக செல்லும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள், தாய்மார்கள், மிகுந்த அச்சத்துடன் செல்லக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லக் கூடிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இங்கு 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெறுகிறது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  எனவே, அக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனில்,  பாரத் சேனா தமிழ்நாடு சார்பில், பொதுமக்களோடு இணைந்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...