ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு : இரண்டாயிரத்து ஐநூறு பேர் பங்கேற்பு


கோவையில் நடைபெற்ற 110-வது பட்டாலியன் ராணுவப் படையில் சேருவதற்கான ஆள்சேர்ப்பு முகாமில் 2500 பேர் கலந்து கொண்டனர். 



110-வது பட்டாலியன் ராணுவப் படையில் 8 ராணுவ படை வீரர்களுக்கும், 3 துப்புரவுப் பணியாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கோவை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது.



இன்று (அக்.,23) காலை தொடங்கிய இந்த முகாமில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 2,500 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு, உயரம், மார்பளவு உள்ளிட்ட உடல் தகுதித்திறன் தேர்வு நடைபெற்றது. 11 பேருக்கான காலியிடங்கள் மட்டுமே உள்ள பணிக்கு ஏராளமானோர் பங்கேற்றிருப்பது ராணுவத்தில் பணியாற்றுவதன் ஆர்வம் இளைஞர்களிடையே அதிகரித்திருப்பதை வெளிக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...