20 ஆண்டுகள் வீடில்லாமல் இருக்கும் சாட்டையடி மக்களுக்கு வீடு வழங்க வலியுறுத்தல்

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வீடில்லாமல் சாலையில் தங்கியிருக்கும் சாட்டையடி மக்களுக்கு வீடு வழங்க வலியுறுத்தி சமூக நீதிக்கட்சிச் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக சமூக நீதிக்கட்சியின் தலைவர் ந.பன்னீர்செல்வம் அளித்துள்ள மனுவில், துடியலூர் சந்தையில் திறந்த வெளியில் வீடில்லாமல் வசிக்கும் சாட்டையடி மக்களின் நிலை பரிதாபத்திற்குரியது. சாட்டையடி மக்களுக்கு கழிவறை உள்ளிட்ட வசதிகளின்றி பெண்கள், குழந்தைகள் திறந்த வெளியில் வசிப்பதும், வளர்மகளிர் நிலையும் மிக மோசமாய் உள்ளது. 



கைகளை அறுத்து சாட்டையால் அடிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். அவ்வாறு பிழைத்து வரும் சாட்டையடி மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக கோவை மாநகரில் இருந்து வருகின்றனர். அம்மக்கள் சுயமரியாதையோடு வாழ மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சியரின் தன்விருப்புரிமை நிதியில் இருந்து வீடு வழங்கியும், மாற்றுத் தொழில் செய்ய கடனுதவியும் உடனடியாக வழங்கிட வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...