கோவையில் சுகாதாரமற்ற வீடுகள் மற்றும் கடைகளுக்கு இதுவரை சுமார் ரூ.6 லட்சம் அபராதம் விதிப்பு


தமிழக அரசின் உத்தரவின்படி, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக, டெங்கு தடுப்பு பணிகளின் கண்காணிப்பு அதிகாரி ஹர்மந்தர் சிங் தலைமையில் கோவை மாநகராட்சி சார்பாக பல்வேறு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன்படி இன்று (அக்.,23) கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட, தர்ஷினி நகர், கணபதி, வயலட் மெட்ரிக்குலேசன் பள்ளி, ஜி.என்.மில்ஸ், சுவாதி பூங்கா, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகுவதற்கு காரணமான பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.23,500 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், நீர் தேங்கிய இடங்கள் மற்றும் குப்பைகூளங்களை உடனடியாக அகற்றி சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, மருதமலை ரோடு, வடவள்ளி, சின்மயா மெட்ரிக்குலேசன் பள்ளி வடவள்ளி, கவுண்டம்பாளையம், சரவணா நகர், வி.ஓ.சி நகர், டி.வி.எஸ் நகர், ஸ்ரீ பாலாஜி வித்யா மந்திர் வீரகேரளம், சீரநாயக்கன்பாளையம், காமராஜபுரம், ஆர்.எஸ்.புரம், வேலாண்டிபானையம், காந்திநகர், எஸ்.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.30,500 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆறுமுக உதயர் வீதி, தெலுங்குப்பாளையம், சொக்கம்புதூர், பிரபா டிரேடர்ஸ், கே.வி.பாளையம், போத்தனூர், மோகன் நகர், சுந்தராபுரம், மோகன் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.53,000- அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம், புலியகுளம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.15,000- அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டு, நீர் தேங்கிய இடங்கள் மற்றும் குப்பைகூளங்களை உடனடியாக அகற்றி சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 22-ம் தேதி வரை டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான வீடுகள், பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மாநகராட்சி மூலம் மொத்தம் ரூ.4,89,000 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இன்று (அக்.,23) மேற்கொண்ட டெங்கு தடுப்பு பணிகளின் போது ரூ.1,22,000 அபராதம் விதிக்கப்பட்டது. கோவை மாநகராட்சி பகுதிகளில் இதுவரை ரூ.6,11,000 அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சியின் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சியின் டெங்கு தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறும் மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...