கந்துவட்டி புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் உத்தரவு

அதிக வட்டி வசூல் குறித்த புகார்கள் மீது உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அதீத வட்டி வசூலிப்பவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வித அச்சமும் இன்றி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அணுகி புகார் அளிக்கலாம். கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது மாவட்ட ஆட்சியர்களும், போலீஸ் அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதிக வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதீத வட்டி வசூல் தடை சட்டம் 2003 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வட்டிக்கு பணம் பெற்றவர்கள் அதீத வட்டி வசூல் தடை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் பணம் செலுத்தி நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்து வட்டி கொடுமையால் நெல்லையில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...