வன்முறையிலிருந்து உலகம் விடுபட சமந்தா கல்வித்திட்ட புத்தகம் வெளியீடு

உலக அளவில் வன்முறையிலிருந்து விடுபட்டு, தலைமை பண்பை பள்ளிக் குழந்தைகளிடையே வளர்க்கும் சமந்தா கல்வித் திட்டப் புத்தகம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து குழந்தைகளின் பாலினத்திற்கும், அனைத்து மதத்தினருக்கும், இனத்துக்கும் ஏற்ப பணியாற்றும் வகையில் உருவாக்கப்பட்டதே சமந்தா திட்டமாகும். ஒருவருக்கு ஒருவர் மரியாதை அளித்து, மரியாதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டு மேம்பாடு செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.

அதற்கான கல்வித் திட்டங்களை உருவாக்கி, மதிப்புகளைக் கொண்டிருப்பதுடன், குந்தைகளின் தன்மையை சமந்தா மேம்படுத்தி வருகிறது. வன்முறைக்கு எதிரான, குறிப்பாக பாலியல் வன்முறைக்கு எதிராக பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க உலகம் முழுவதும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஒருங்கிணைந்த இந்த கல்விதிட்டத்தில், 3 முதல் 4 வயது முதல் துவங்கும் முதல் நிலையில் 140 பாடத்திட்டங்கள் இருக்கும் இரண்டாவது நிலையில் 4 முதல் 5 அல்லது 5 முதல் 6 வயதில் நிறைவு பெறும். அடுத்தடுத்த புதிய பாடங்கள் பள்ளி கல்வி நிறைவு பெறும் வயதில் 17 முதல் 18 ல் நிறைவு பெறும். உலக அளவில் 20 நிபுணர்கள் கொண்ட குழு, இதை வடிமைத்து மேம்படுத்தியுள்ளது. 

குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம், வழிமுறைகள் குறித்து படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடத்திட்டம் இலங்கை, போட்ஸ்வானா, அர்ஜெண்டினா, கென்யா போன்ற நாடுகளில் முன்மாதிரி அடிப்படையில் கடந்த ஜனவரி 2017 முதல் துவக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2017 முதல் கனடா, இந்தோனேஷியா, மற்றும் நைஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கல்வித் திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை துாதர அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு கொரியா சியோல் நகரில் நடந்த உலக கல்வி மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கி மூன் இது தொடர்பாக அங்கீகாரம் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தற்போது கோவையில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜய்கார்த்திகேயன் மூலம் சமந்தா தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் டி. லக்ஷ்மிநாராயணசாமி புத்தகங்களை பெற்றுக்கொண்டார். தலைமை கல்வி அதிகாரி உமா, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை தலைமை வியாபார அலுவலர் ஸ்வாதி ரோஹித் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.



Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...