முடிவுக்கு வரும் நிலம் கையகப்படுத்தும் விவகாரம் - விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடம் அளிக்க உரிமையாளர்கள் ஒப்புதல் ?


கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்காக நிலத்தை கையகப்படுத்துவதில் அதிகாரிகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 

பீளமேட்டை அடுத்த சித்ராவில் உள்ள கோவை சர்வேதச விமான நிலையத்தில் பல சர்வதேச விமானங்கள் அதிக அளவு வந்து செல்லும் வகையில் கடந்த 2௦10-ம் ஆண்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதன் காரணமாக விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அருகில் உள்ள சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர் போன்ற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

குடியிருப்புகள், விவசாய நிலங்கள் ஆகியவைகளை விட்டு வேறு எங்கு செல்வது என தவித்து வந்த மக்கள் இந்த திட்டத்திற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், விரிவாக்க பணிக்காக எடுத்துக்கொள்ள இடங்களுக்கு சந்தை மதிப்புப்படி நிவாரண தொகை அளிக்கவேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதில் அவர்களுக்கு சாதாகமாகவே தீர்ப்பும் கிடைத்தது. இருப்பினும், அதனை மாநில அரசு அமல்படுத்தாமல், மிக குறைந்த அளவே நிவாரண தொகை மட்டுமே அளிப்பதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 



இதனால், நிலம் கிடைக்காத காரணத்தால், கோவை சர்வதேச விமான நிலையத்தை, விரிவாக்கம் செய்வது, தொடர்ந்து தாமதமாகி வந்தது. இதனிடையே, நிலத்தை கையகப்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான குழு நியமிக்கப்பட்டு, நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை தொடர்ந்து, நடைபெற்று வந்தது. முதலில் சதுர அடிக்கு ரூ.600 அளிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தொகையை இரட்டிப்பு செய்து கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதிலும், ஒரு சிலர், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருப்பதால், அங்குள்ள சந்தை மதிப்பிலேயே வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இதைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, ஒரு சதுர அடிக்கு ரு.1,500 எனவும், விவசாய நிலங்களுக்கு சதுர அடி ரூ.900 என்ற அடிப்படையில், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.3.92 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனை நில உரிமையாளர்களும் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக அரசு கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கவுதம் தாமோதரசாமி கூறுகையில், ஒரு சில உரிமையாளர்களின் நிலம் விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியே உள்ளது. நிலத்தை கையகப்படுத்துவதன் மூலம், அரசு அளிக்கும் தொகை குறித்து அனைவரிடமும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், கையகப்படுத்தப்படும் இடங்களில் உள்ள சிறு தொழில்நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு 5 கி.மீ தொலைவில் மாற்று இடத்தை வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வீடுகள் கட்டுவதற்கு பணமும் அளிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளனர். 

விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மொத்தம் 627.89 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் தேவைப்படுகிறது. இதில், 461.90 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் தனியார் வசம் உள்ளன. எஞ்சிய 134.32 ஏக்கர் நிலங்கள் புறம்போக்கு நிலங்களாகும். தனியார் வசம் உள்ள 65 சதவீத நிலங்களில் விவசாயம், குடியிருப்புகள் மற்றும் தொழில்நிறுவனங்கள் உள்ளன. 

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் வசிக்கும், இரண்டு கோடி மக்களுக்கான விமான நிலையமாக உள்ள  கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணி கானல் நீராக இருந்து வந்தது. இந்த நிலையில், நில உரிமையாளர்களுடன் ஏற்பட்டுள்ள சமரசத்தால், விரைவில் விமான நிலையம் புத்துயுர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...

Toddler Dies After Accidental Fall into Water Sump in Coimbatore

Dhanvanth, a one-year-old child, died after he allegedly fell into an underground water sump near his house in Rathinapu...

Man Severely Beaten by Public Over Alleged Chain-Snatching Attempt Near Pappampatti

A video showing members of the public assaulting a man allegedly caught after attempting to snatch a gold chain from a w...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 வரவேற்பு ந...