ஆக்கிரமிக்கும் போஸ்டர்கள்


லாலிரோடு சந்திப்பில் கோவை காவல் துறையால் அமைக்கப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் சேவை எண் விழிப்புணர்வு பேனரை தனியார் விளம்பர போஸ்ட்டர்கள் ஆக்கிரமித்துள்ளன.



பொதுமக்களின் குறைகளை விரைவாகவும் எளிதாகவும் பெறுவதற்கு வசதியாக, 2016ஆம் வருடம் கோவை காவல் துறையால் தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பொதுமக்கள் தங்களின் குறைகளையும் புகார்களையும், புகைப்படங்களாகவும் காட்சிகளாகவும் பதிவு செய்து காவல்துறைக்கு நேரடியாக அனுப்பி வருகின்றனர். காவல்துறையினரும் உடனடியாக இந்த புகார்களை ஆராய்ந்து தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். 

இந்த சேவையை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நகரின் முக்கிய சந்திப்புகளில் வாட்ஸ் ஆப் சேவை எண் அடங்கிய பேனர்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. சந்திப்புகளில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், சாலையை கடக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் காவல்துறையினரின் வாட்ஸ் ஆப் சேவை எண்ணை குறித்துக்கொண்டு தங்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், காவல்துறையின் வாட்ஸ் ஆப் சேவை பற்றிய பேனர்கள் தொடர்ந்து தனியார் போஸ்டர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மறைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, காவல்துறையை தொடர்புகொள்வதற்கான 24 மணி நேர சேவை எண்ணையே மறைத்தவாறு விளம்பர போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டுவதால் பொதுமக்களிடம் இந்த சேவையைக் கொண்டு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...