காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் நவ.,1-ம் தேதி திறக்கப்படும் - அமைச்சர் அறிவிப்பு


கோயம்புத்தூர், அக். 28: கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் நவம்பர் 1 ம் தேதி திறக்கப்படும் எனவும் , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார் எனவும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை விமான நிலைய விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நில நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு  இருப்பதாகவும் அவர்தெரிவித்தார்.

கோவை விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.அமைச்சர்  வேலுமணி,தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,கோவை மாவட்ட ஆட்சியர்,கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் விமானநிலையஆணைய அதிகாரிகள் பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு பின்னர்  அமைச்சர் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார். கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நில நிர்வாக  குழு ஆணையர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாகவும்,நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பணிகளை விரைவாக அந்த குழு மேற்கொள்ளும் என தெரிவித்தார்.விமான நிலையம் மேம்படுத்தப்பட்டால் கோவை,திருப்பூர் மாவட்டங்கள் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்தவர்,விமான நிலைய விரிவாக்கத்திற்காக பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு  அவர்களுக்கு உரிய தொகை கிடைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் நவம்பர் 1 ம் தேதி திறக்கப்படும் எனவும் , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார் எனவும் படிப்படியாக மெட்ரோ ரயில் பாலங்கள் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...