விபத்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி

கோவை, அக்டோபர் 31: கடந்த 2015-ம் ஆண்டு மதுக்கரை அருகே அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காத பேருந்தை கோவை முதலாவது சார்பு நீதிமன்றம் ஜப்தி செய்தது. 



மதுக்கரை அருகேயுள்ள ஒக்கிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த கிட்டான் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து மோதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அரசு பேருந்து மோதி பலியான கிட்டான் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சத்து 86 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. இதனை அரசு போக்குவரத்து கழகம் இதுவரை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. 

இந்த நிலையில், உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக்கோரி கிட்டானின் மனைவி பாப்பாத்தி கோவை முதலாவது சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 7.5 சதவீத வட்டியுடன் ரூ. 5 லட்சத்து 11 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டும், அதை போக்குவரத்து கழகம் வழங்காததால், பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி, அதிகாரிகள், அரசுப் பேருந்தை பறிமுதல் செய்தனர். 

Newsletter

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...

வேளாண் இளங்கலைப் பட்டப்படிப்பு, டிப்ளமோ சேர்க்கை: துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவின் 2026-27 பட்டப்படிப்பு மற்றும் பட்ட...

Coimbatore to Hold Rally on Settling Disputes Through Mediation

As part of the nationwide initiative, the District Mediation Centre will organise an awareness rally on September 9, to...

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...