வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் கட்சிக்கொடிகள்

கோவை, நவம்பர் 1: புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட காந்திபுரம் மேம்பாலத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கய அமைச்சர்கள் இன்று கோவை வருகின்றனர். இதனால், நகரின் அனைத்து சாலைகளும் கட்சி விளம்பர பேனர்களால் நிரப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, அவினாசி சாலையின் இருபுறமும் கட்சி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதோடு, சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் ஆயிரக்கணக்கான கட்சிக் கொடிகளும் கட்டிவைக்கப்படுள்ளன.



சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் உள்ள சிறிய ஓட்டை வழியாக மரக்கட்டையை நுழைத்து, அதில் கட்சி கொடியைக் கட்டிவைத்துள்ளனர். இந்த மரக்கடைகள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையின் நடுவே நீட்டி கொண்டிருப்பதால் வாகன விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்கள் இந்த மரக்கட்டைகளை ஒட்டிச் செல்லும்போது மிகவும் கவனமாக சாலையைக் கடக்க வேண்டியுள்ளது.



கட்சிக்கொடி கட்டிவைக்கப்பட்டுள்ள ஓர் மரக்கட்டையில் இடித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கல்லூரி மாணவர் பிரசாத் கூறியதாவது, 'நான்கு சக்கர வாகனங்கள் அருகில் வந்ததால், என்னுடைய இரு சக்கர வாகனத்தை சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை ஒட்டி நகர்த்தினேன். எதிர்பாராத விதமாக தடுப்புகளில் நுழைக்கப்பட்டுள்ள மரக்கட்டை ஒன்றில் இடித்து எனது வாகனம் நிலை குலைந்தது. மிதமான வேகத்தில் வந்ததால் வாகனத்தை கட்டுப்படுத்தி உயிர் தப்பினேன். சாலையின் ஓரத்தில் மரக்கடைகள் நீட்டிகொண்டிருப்பதால் வாகனத்தை ஓட்டுவதற்கு சிரமமாக உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் கட்சிக்கொடிகளும், விளம்பர பேனர்களும் வைக்கப்படுவதால் சாலைகளின் அளவே குறைந்து விடுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகின்றது. ஆபத்தான வகையில் கட்டப்படும் கொடிகளால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. மக்களை காப்பாற்ற வேண்டிய அரசே, மக்களுக்கு இடையூறாக செயல்படுவது வேதனையளிக்கிறது.' என்றார்.



சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் ஆபத்தான வகையில் கட்டப்படும் கட்சிக்கொடிகளில் பல காற்றின் வேகத்தால் சாய்ந்து சாலையின் நடுவே விழிந்து விடுகின்றன. நகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்பான லட்சுமி மில்ஸ் சந்திப்பில் சாலையின் நடுவே சாய்ந்து விழுந்துள்ள கட்சிக்கொடி வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்திவருகின்றது. 

இதுகுறித்து கோவை நுகர்வோர் தன்னார்வ அமைப்பின் செயலர் கே.கதிர்மதியோன் கூறியதாவது, 'செடிகளால் அமைக்கபட்டிருந்த மண் தடுப்புகளில் கொடிகள் ஊன்றப்படுவதால் தான் தற்போது இருக்கின்ற கான்க்ரேட் தடுப்புகள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டன. சிறிய ஓட்டை வழியாக, இதிலும் கொடிகள் கட்டத் தொடங்கிவிட்டனர். இவ்வாறு கட்சிக்கொடிகள் கட்டுவதற்கு முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது தெரியவில்லை. காரணம், சாலை தடுப்புகளில் கொடிகள் கட்டக்கூடாது என்பது அரசின் விதி. சாலைகள் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தாலும், விதிகளை மீறி போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அனுமதியுள்ளது. அரசியல் காரணங்களால் இதுபோன்ற விதிமீறல்கள் தட்டிகேட்கப்படுவதில்லை.' என்றார்.

Newsletter

Coimbatore to Hold Rally on Settling Disputes Through Mediation

As part of the nationwide initiative, the District Mediation Centre will organise an awareness rally on September 9, to...

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...

Toddler Dies After Accidental Fall into Water Sump in Coimbatore

Dhanvanth, a one-year-old child, died after he allegedly fell into an underground water sump near his house in Rathinapu...

Man Severely Beaten by Public Over Alleged Chain-Snatching Attempt Near Pappampatti

A video showing members of the public assaulting a man allegedly caught after attempting to snatch a gold chain from a w...